Sunday, October 10, 2010

கோவிலில் வழிபடும் முறைகள்

வழிபடும் முறை:-

* கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

* நெற்றியில் ஆண்கள் திருநீறும் சந்தனமும் , பெண்கள் குங்குமம் இல்லாம் வழிபடக்கூடாது.

* கோயில் வாயிலில் நுழையும் முன் நீரால் கை, கால்களை அலம்பிக் கொண்டு பிறகு செல்ல வேண்டும்.

* கோயில் உள்ளே சென்றவுடன் யாரிடமும் பேசாமல் இறைவனை மட்டும் மனதில் பிராத்தனை செய்ய வேண்டும்.

* கோயிலுக்குச் சென்றவுடன் முதலில் கோபுரத்தை பார்த்து இரு கைகளையும் தலைக்குமேல் தூங்கி வணங்க வேண்டும்.

* அதன் பிறகு கொடி மரத்தின் வலது பக்கத்தில் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

* பிறகு பலிபீடத்துக்கு அருகில் சென்று நம்மிடமுள்ள தீய குணங்களை பலிகொடுத்தாக வணங்க வேண்டும்.

* அதன் பிறகு விநாயகரை வணங்க வேண்டும். விநாயகரை வணங்கும் போது தோர்பிஹ் கர்ணமிட்டு நெற்றி பொட்டுகளில் இலேசாகக் குட்டிக் கொள்ள வேண்டும்.

* கோயிலுக்குள் சுற்றும் போது வேகமாக நடக்காமல் மெதுவாக நடக்க வேண்டும். மும்முறை சுற்றி வந்ததும் கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்க வேண்டும். அர்ச்சனைகள் செய்து ஆரத்தி காட்டியதும் தீபத்தை பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

* பின்பு கோயிலுக்கு வெளியில் அனுமாரை தரிசித்து கோயிலுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

* பிறகு சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் மானசிகமாக தரிசித்துவிட்டு உத்தரவு பெற்றுக் கொண்டு கிளம்ப வேண்டும்.

No comments:

Post a Comment