Sunday, October 10, 2010

சித்தர்கள் குறிப்பிடும் `ஆலயம்’

சித்தர்கள் நமது உடலையும், அதிலுள்ள ஆதாரங்களையும் மனதில் கொண்டு தான் ஆலயத்திற்கு வடிவம் கொடுத்துள்ளளனர்.
அது எப்படி என்று கேட்கிறீர்களா?
நமது இதயம் மூலஸ்தானம் என்று குறிப்பிடுகின்றனர். நமது உடலை அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்த மயகோசம் என்று 5 பிரகாரங்களாக பிரித்துள்ளனர். இவற்றில் உடலை அன்னமயகோசமாகவும், பல வினைகள் அடங்கிய உடலை பிராணமய கோசமாகவும், அறிவு சொரூபமானதை மனோமயகோசமாகவும், அறிவுப்பொறியுடன் கூடியதை விஞ்ஞானமயகோசமாகவும், நிறைந்த இன்பம் தருவதை ஆனந்த மயகோசமாகவும் கூறுகின்றனர்.
அறிவின் மூலம் அறிவுப் பொறியைத் தட்டி திறக்க வேண்டும். இதைக் கொண்டு பல வினைகள் அடங்கிய மாயையான உடலை அந்த வினைகளில் இருந்து நீக்கிவிட வேண்டும். பின்பு கடவுளை அடைந்தால் நீங்காத நிறைந்த இன்பத்தை பெறலாம் என்பதே இந்த ஐந்து பிரகாரங்கள் உணர்த்தும் உண்மை. இவை ஒவ்வொன்றையும் நாம் முறையாக கடக்கும்போது பஞ்சமாபாதகங்களை ஒவ்வொன்றாக விட்டு நீங்கி விடுதலை பெற்று விடலாம்.
நம் உடலில் இருக்கும் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாதகம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை முறையே கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், அபிஷேக மண்டபம், அலங்கார மண்டபம், சபா மண்டபம் என்று 6 மண்டபங்களாக வடிவமைத்துள்ளனர்.
ஆக்ஞை என்பது கடவுளை குறிக்கிறது. அன்பு என்பது அறியப்படும் பொருள். நமது உடலில் உள்ள முதுகுத்தண்டுதான் கொடிமரம். கடவுளைக் காணச் செல்லும் முன்பு நமது ஆணவம், தீய எண்ணங்கள் அனைத்தையும் பலி கொடுத்துவிட்டு, அகத்தூய்மை, புறத்தூய்மையுடன் தான் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பலிபீடம் அமைத்துள்ளனர்.

No comments:

Post a Comment